விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் மூர்த்தி – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலின் முத்து கலர்ஸ் தமிழ் சேனலில் புதிய சீரியலில் களமிறங்கி இருப்பதால் ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால் அவர் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை இந்தியாவில் 8 மொழிகளில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தெலுங்கு வெர்சன் சில மாதங்களுக்கு முன் தான் முடிந்தது. தமிழில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் இருக்கிறது. கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பற்றியும் கஷ்டம் நஷ்டங்களை தாண்டி உறவுகளுக்கு எவ்வாறு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே கதையின் மைய கருத்தாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், சாய் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதைக்களம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதாவது குடும்பத்தில் கடனால் ஏற்பட்ட பிரச்சனையால் கதிர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் மனம் உடைந்த மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர்களை சந்திக்க வேண்டுமா? அரிய வாய்ப்பு இதோ! வைரலாகும் பதிவு!
இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து கலர்ஸ் தமிழ் சேனலில் புதிய சேனலில் களமிறங்கி இருக்கிறார். பச்சைக்கிளி என்ற சீரியலில் அவர் அண்ணன் ரோலில் நடிக்க இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அவர் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.