பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முல்லை – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!
முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா சீரியலில் இருந்து விலகியுள்ளார். காவியா சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லை அனைத்து தடைகளையும் தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து குடும்பத்தினர்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர். ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய செலவாகும் என்பதால் தற்போது வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறிவிடுகிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்கள்!
ஆனால் மூர்த்தி கூறியது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதாவது அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என கூறி மீனா சண்டை போடுகிறார். இதற்குப் பிறகும் முல்லை இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என்பது சந்தேகமே. இதற்குப் பிறகு முல்லையிடம் ஒருவர் நீ குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய். கண்டிப்பாக உனக்கு குழந்தை பிறக்கும் என கூறுகிறார்.
அவர் கூறியதை போல முல்லை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்கிறார். பரிகாரம் செய்த பிறகாவது முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா பட வாய்ப்பின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து வந்த தேஜஸ்வினி கவுடா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவியா சீரியலில் இருந்து விலகி உள்ளதால் ரசிகர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்.