பாக்கியா பக்கம் நியாயத்தை நிரூபித்த எழில், ராதிகா மீது கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா எந்த தவறும் செய்யாமல் இருந்தும் போலீசில் மாட்டிக் கொள்கிறார். எழில் எங்கே தப்பு நடந்துள்ளது என கண்டுபிடிக்க முயல்கிறார்.ஆனால் ராதிகா பாக்கியா மீது துளி கூட நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார். அதனால் பாக்கியா அதிரடி முடிவு ஒன்றை எடுக்க போகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கொடுத்த ஆர்டரை பாக்கியா செய்து முடிக்க அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. குழந்தைகள் மருத்துவமனையில் இருக்க அதனால் போலீஸ் வந்து விசாரணை செய்கின்றனர். கோபி மெஸ்ஸில் வாங்கியதாக சொல்ல பாக்கியா மீது பழி வருகிறது. பாக்கியாவை போலீசார் கைது செய்ய ஆனால் பாக்கியா எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக சொல்கிறார். ராதிகாவுக்கு இவ்வளவு ஆதரவாக இருந்தும் கூட ராதிகா தன்னை நம்பாமல் இருப்பதை நினைத்து பாக்கியா வருத்தப்படுகிறார்.
இந்நிலையில் எழில் வந்து பாக்கியாவை எப்படியாவது காப்பாற்றுவேன் என சொல்ல, என்ன செய்வது என அவருக்கும் தெரியாமல் இருக்கிறது. எழில் செல்வியிடம் யாரெல்லாம் சமைத்தார்கள் என கேட்க அப்போது செல்வி வெளியே இருந்து ஒருவர் லட்டு கொடுத்ததாக சொல்கிறார். எழில் அந்த லட்டை எடுத்து பார்க்க அது தான் கெட்டு போய் இருக்கிறது. அதனால் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை எழில் கண்டுபிடித்து பாக்கியாவை காப்பாற்றுகிறார்.
சன் டிவி “கயல்” சீரியல் செய்த சாதனை – பரிதாப நிலையில் பாரதி கண்ணம்மா! குவியும் வாழ்த்துக்கள்!
ஆனால் அப்போது கூட ராதிகா தன்னை நம்பாமல் இருப்பதை பார்த்து பாக்கியாவிற்கு கோவம் வருகிறது. இந்நிலையில் இனிமேல் ராதிகாவை பார்க்கவே மாட்டேன் என பாக்கியா முடிவு செய்து விடுகிறார். கோபிக்கு இனிமேல் சந்தோசம் தான் என்பதால் இனி கோபியின் ஆட்டம் வேற மாதிரி இருக்க போகிறது. அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. இதுவரை பாசிட்டிவ் ரோலாக காட்டப்பட்ட ராதிகா கதாபாத்திரம் தற்போது நெகட்டிவ் ரோலாக காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.