“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் மாற்றப்பட்ட முல்லை? வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இந்நிலையில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக செய்தி பரவி வருகிறது. அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியானதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
புதிய முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு குடும்ப சீரியலாக தமிழ் சின்னத்திரையில் வெற்றிநடை போடுகிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகள் பாசம் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்றாவது தம்பி கதிர் அவரது மனைவி முல்லை காதல் காட்சிகளை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்தார். ஆனால் அவர் இறந்த நிலையில், அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா களமிறங்கினார்.
‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் பரிசை வெல்லப்போவது இவர் தான்? ரசிகர்கள் உற்சாகம்!
அவர் முல்லையாக நடிக்க தொடங்கி தற்போது ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், அவரை புது முல்லையாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முல்லை காவ்யா விலக இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து காவ்யா கூறுகையில், நல்ல பட வாய்ப்புகள் வந்தால் சீரியலில் இருந்து விலகுவேன் என தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
தற்போது முல்லை கதாபாத்திரம் போல மேக்கப் போட்டு கஸ்தூரி அண்ணி உடன் எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் முல்லை கதாபாத்திரத்தில் போலவே இருப்பது, அபிநயா என்பவர் நடிக்க இருப்பது போல இருக்கிறது. ஆனால் வெளியான தகவலின் படி முல்லை கதாபாத்திரம் விலகவில்லை புதிதாக வந்தவர் அவருக்கு தோழியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. அவரை வைத்து சீரியலில் சீரியலில் எந்த மாதிரி கதை செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.