‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன் முதலாக ரசிகர்களை சந்தித்த தாமரை – வைரலாகும் வீடியோ!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன் முதலாக ரசிகர்களை சந்தித்த தாமரை - வைரலாகும் வீடியோ!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன் முதலாக ரசிகர்களை சந்தித்த தாமரை - வைரலாகும் வீடியோ!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன் முதலாக ரசிகர்களை சந்தித்த தாமரை – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் தாமரைச்செல்வி முன்னாள் போட்டியாளர் ஐக்கி பெர்ரி உடன் இணைந்து ஒரு லைவ் வீடியோவில் ரசிகர்களை சந்தித்துள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தாமரை

மக்களின் பேராதரவுடன் துவங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக 5 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மக்கள் இன்று வரையும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

ராதிகாவிடம் போனில் பேசும் கோபி, சந்தேகத்துடன் பார்க்கும் பாக்கியா – சீரியலில் சூப்பர் ட்விஸ்ட்!

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் கலந்து கொண்டு வந்த போட்டியாளர்கள் ராஜு, பிரியங்கா, நிரூப், பாவனி மற்றும் அமீர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் தாமரை செல்வி ரசிகர்களுடன் நேரலையில் உரையாடி இருக்கிறார்.

அதாவது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஐக்கி பெர்ரியுடன் லைவ் சேட்டில் உரையாடிய தாமரை செல்வி, முதலில் ஐக்கி பெர்ரி ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறியதும் அவரை மிஸ் செய்ததாக கூறினார். தொடர்ந்து தாமரை செல்வி பேசும் போது, ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருந்த எல்லாரும் ஓரளவு மக்களால் அறியப்பட்டவர்கள். ஆனால் நான் ஒரு நாடக கலைஞர். என்னை யாருக்கும் தெரியாது. அதனால் உள்ளே இருக்க முடியுமோ இல்லையோ என்று பயந்து கொண்டே இருந்தேன்.

ஐஸ்வர்யாவால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்கு வந்த புதிய பிரச்சனை – அதிர்ச்சியில் மீனா, தனம்!

எனக்கு ஆதரவு அளித்த மக்கள் எல்லாருக்கும் நன்றி கூறுகிறேன். எனக்கு ஓட்டு போட்ட அத்தனை மக்களுக்கும் நன்றி. நீங்கள் ஓட்டு போட்டதினால் தான் நான் இவ்வளவு நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு வெளியே வந்திருக்கிறேன். இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் ஜெயித்து விட்டு தான் வந்திருக்கிறேன். நான் நினைக்கவில்லை எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று. இது போதும் எங்களுக்கு’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!