தொண்டை சரி இல்லாமல் போன சத்யா, பாடல் போட்டியில் வெற்றி பெறுவாரா? வெளியான “மௌன ராகம்” ப்ரோமோ!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில், தற்போது பரபரப்பான கதை சென்று கொண்டிருக்கிறது. சத்யா பாடல் போட்டியில் கலந்து கொள்ள இருக்க அதில் வரும் இடையூறுகள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மௌன ராகம் 2:
மௌன ராகம் சீரியலில் சத்யா அம்மாவை காப்பாற்ற தான் திருமணம் செய்து கொண்டார். அதனால் பணத்திற்கு திருமணம் செய்தாள் என ஷீலா வருண் மனதை மாற்ற வருண் சத்யா மீது கோவமாக இருக்கிறார். நான் பணத்திற்காக தான திருமணம் செய்தேன் அந்த பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என சத்யா சவால் விடுகிறார். அப்படி என்னால் கொடுக்க முடியாமல் இருந்தால் நான் இந்த வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என சத்யா சொல்கிறார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார துறை செயலாளர் பேட்டி!
இந்நிலையில் பாடல் போட்டி பற்றி கேள்விபட்ட சத்யா நான் கலந்து கொள்கிறேன் என சொல்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி சத்யாவை பாட விடாமல் செய்ய ஷீலா பல திட்டங்களை தீட்டுகிறார். சத்யா குரலை சரி செய்யவிடாமல் செய்துவிட அடுத்து சத்யா என்ன செய்ய இருக்கிறார் என அனைவரும் எதிர்பாத்து இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சத்யா குரல் சரி இல்லாமல் போக மிளகு பால் வைத்து குடிக்கிறார்.
மனோகரிடம் வந்து எனக்கு தொண்டை சரி இல்லை என சொல்கிறார். உன்னால் பேச கூட முடியவில்லை எப்படி பாட போகிறாய் இந்த போட்டியில் நீ தோற்க தான் போகிறாய் என ஷீலா சொல்ல, இல்லை நான் எப்படியாவது பாடுவேன் என சத்யா சொல்கிறார். மறுபக்கம் உன்னால் தான் சத்யா இப்படி கஷ்டப்படுகிறார் என தருண் வருணிடம் சொல்கிறார். சத்யா போட்டியில் வெற்றி பெறுவாரா? வருண் சத்யாவை புரிந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.