பாகியலக்ஷ்மி தொடரில் ராதிகாவை பார்க்க விடாமல் சத்தியம் வாங்கும் கோபியின் அப்பா – முக்கிய திருப்பங்கள்!
பாகியலக்ஷ்மி தொடரில் கடந்த வாரம் நடந்த காட்சிகளின் தொடர்ச்சியாக பல அதிரடியான மாற்றங்கள் கதையில் வர இருப்பதாகவும், இதனால் ரசிகர்களுக்கு கதை மிகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் என்றும் தகவ்லவெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை. தொடர்ந்து கதை மிகவும் விறுவிறுப்பாக செல்லத் தொடங்கிய பிறகுதான் ரசிகர்களின் எண்ணிக்கை பாக்கியலட்சுமி தொடருக்கு அதிகரித்தது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கதை கொண்டு செல்லப்படுகிறது. பாக்கியாவின் கணவர் கோபி வீட்டிற்க்கு தெரியாமல் தனது பள்ளி காதலி ராதிகாவுடன் பழகி வருகிறார். இதனால் அறிந்து இதற்கு முன்னரும் கோபியின் அப்பா கண்டித்திருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் சம்பள உயர்வு – அரசு ஆலோசனை!
ஆனால் கோபி அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் எப்போதும் போல் ராதிகாவோடு பழகி வருகிறார். இந்நிலையில், பாக்கியா செய்து வரும் கேட்டரிங் தொழில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதை பிடிக்காமல் கோபி வீட்டில் இதற்கான வேலைகளை செய்யக்கூடாது என்று கூறிவிடுகிறார். இதனால் வீட்டில் அருகில் உள்ள இடத்தை தனியாக கேட்டரிங் வேலைக்கு என்று பாக்கியா பிடிக்கிறார். அப்போது, பாக்கியாவின் மகன் எழில் இதற்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்று வேண்டும் என்று சொல்கிறான். ஆனால் வீட்டில் உள்ள அனைவரு இதற்கு கேலி செய்து சிரிக்கின்றனர்.
நடிகர் சத்யராஜ் வீட்டில் நடந்துள்ள திடீர் சோகம் – பிரபலங்கள் இரங்கல்!
இந்நிலையில், வரும் வாரம் இந்த விளம்பரப் படத்தில் பாக்கியாவை வைத்து எழில் தயாரிக்கிறேன். இதனை அறிந்த கோபி மிகவும் கோவப்படுகிறார். ஆனால் இந்த விளம்பரத்தின் மூலம் பாக்கியாவின் கேட்டரிங் தொழில் பற்றி அதிக மக்கள் அறிந்து கொண்டு, இதனால் தொழில் பெருகுகிறது. அதேநேரம், கோபி ராதிகாவின் அம்மா பேச்சை கேட்டு பாக்கியாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் வர உள்ளது. ஆனால் கோபியின் அப்பா இனி நீ ராதிகாவை பார்க்க கூடாது என்று சத்தியம் வாங்குவது போலவும் அடுத்தடுத்து திருப்பங்கள் வர உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தொடர் மிகவும் பரபரப்பாக செல்ல இருப்பது உறுதியாகிறது.