ஒமைக்ரான் வைரஸ் பரவல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார துறை செயலாளர் பேட்டி!
இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருக்கிறார்.
ஒமைக்ரான் வைரஸ்:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 10 நாட்களில் 38 நாடுகளுக்கு பரவி உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது வரை 5 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.தமிழகத்தில் ஊரடங்கு தேவைப்படுமா என சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறுகையில், மக்கள் ஒமைக்ரான் வைரஸ் நினைத்து அச்சம் கொள்ள தேவை இல்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவதும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடித்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா வைரஸ் தற்போது உருமாறி இருக்கிறது. அதனால் வரும் காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்தியா முழுவதும் உள்ள முன்கள, சுகாதார பணியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராணிபேட்டை , திருப்பத்தூர் , மயிலாடுதுறையில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தருமபுரி, வேலூர் , மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் சம்பள உயர்வு – அரசு ஆலோசனை!
ஆர்என்ஏ உருமாறுதல் என்பது இயல்பானதுதான். அனைத்து வகை உருமாறுதலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம் , மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும் , வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தாலே ஊரடங்கு தேவைப்படாது. இருந்தாலும் ஊரடங்கு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளின் படி நடப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.