சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

0
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் இன்று (அக்.13) நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை நேற்றிலிருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிலவரம்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல், விலையை சர்வதேச பங்குசந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாளுக்கு நாள் நிர்ணயித்து வருகின்றன. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது தற்போது கடந்த 3 நாட்களாகவே மாற்றம் ஏதும் இல்லாமல் காணப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சேலம், திருச்சி போன்ற பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலையானது சற்று அதிகரித்துள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் விலை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

அதனை தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.102.54 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.98.35 க்கும், திருச்சி மாவட்டத்தில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.102.24 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.98.07 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.105.09 க்கும், டீசல் 1லிட்டர் ரூ.96.28 க்கும், பெங்களூரில் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.108.08 க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.98.89 க்கும் நேற்றைய விலையிலேயே மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் 101.79 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அக்-13 நேற்றைய விலையிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாடு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

இவ்வாறு கடந்த 3 நாட்களாக விலையில் மாற்றம் ஏதும் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று வருத்தத்தை தான் அளித்து வருகிறது. எனினும் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்தும் காணப்படுவது அப்பகுதி மக்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருந்தாலும் பல்வேறு பகுதிகளில் விலை உயர்வு இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!