சந்தியா, சரவணனிற்கு வண்டி ஓட்ட சொல்லி தருவதை பார்த்த சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சரவணனிற்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுப்பதை சிவகாமி பார்த்துவிடுகிறார். பின் வீட்டில் வந்து சண்டை போடுவது போல பேச சந்தியா மன்னிப்பு கேட்கிறார். பின் சரவணன் சிவகாமியை பின்னால் அமர வைத்து நீண்ட தூரம் ஓட்டி வருகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா சரவணனிற்கு வண்டி ஓட்ட கற்று கொடுக்க, சிவகாமி அதை பார்த்துவிடுகிறார். பின் சந்தியா சரவணன் சரியாக வண்டி ஓட்டவில்லை என சொல்லி சந்தியா சரவணனை அடித்துவிடுகிறார். அதை சிவகாமி தூரத்தில் இருந்து பார்த்துவிட அந்த பக்கம் செல்லும் பெண் ஒருத்தி இதான் கலிகாலம் போல என சொல்லி சிவகாமியின் கோவத்தை அதிகரித்துவிடுகிறார். மறுபக்கம் பாஸ்கர் பார்வதி நேரடியாக சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது, பார்வதி எனக்கு தலைவலியாக இருக்கிறது என சொல்லி கிளம்புகிறார்.
உடனே பாஸ்கர் பார்வதி கையை பிடித்து உக்கார சொல்ல, பார்வதி உக்கருகிறார். அப்போது பார்வதி கையில் மோதிரம் இல்லாததை பார்த்து பாஸ்கர் கேள்வி கேட்கிறார். உடனே பார்வதி அது எங்க இருக்கிறது என தெரியவில்லை என சொல்கிறார். உடனே பாஸ்கர் அது நம்ம காதலின் அடையாளம் அதை இப்படி கழட்டி வைத்துள்ள என சொல்ல, அவர் எனக்கு முடியலை என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். சிவகாமி வீட்டிற்கு வந்து கோவத்துடன் பார்வதி போனை புடுங்குகிறார்.
எப்ப பார்த்தாலும் மாப்பிள்ளையிடம் போன் பேசிக் கொண்டு இருக்க என சொல்லி திட்டுகிறார். பின் சுந்தரத்தை திட்ட என்னை எதற்கு திட்டுகிறாய் என கேட்கிறார். உடனே இந்த வீட்டில் எனக்கு மரியாதை இல்லை என சொல்லி ஆதி இன்னும் வேலைக்கு கிளம்பவில்லையா என கேட்கிறார். அப்போது சந்தியா சுடிதாருடன் வர அர்ச்சனா பார்த்தீங்களா எவ்வளவு தைரியம் என சொல்லி ஏற்றி விடுகிறார். உடனே சந்தியா தான் வண்டி ஓட்ட சொல்லி கொடுத்தார் என அனைவரிடமும் சிவகாமி சொல்கிறார்.
அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, சந்தியா சொல்லுனும் என்று தான் சொன்னார்கள் ஆனால் நான் தான் முழுவதும் கற்றுக் கொண்டு சொல்லலாம் என சொன்னேன் என சரவணன் சொல்கிறார். உடனே சந்தியா மன்னிப்பு கேட்கிறார். பின் ஆதி செந்தில் அர்ச்சனா சந்தியாவை பற்றி பேசிக் கொண்டிருக்க அவங்களுக்கு பைக் ஓட்ட தெரிகிற அளவு இருக்காங்களே என சொல்லி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் சரவணன் லைசன்ஸ் வாங்குற அளவு ஓட்டமாட்டான் என சொல்லி நக்கலடித்து சிரிக்கின்றனர்.
அதன் பின் சிவகாமியிடம் சரவணன் பேச வர, நீ இப்போல்லாம் என்னிடம் நிறைய விஷயங்களை மறைத்துவிடுகிறாய் என சரவணன் சொல்கிறார். பின் சரவணன் என்னுடன் வாங்க என்னுடைய நீண்ட நாள் ஆசை என சொல்லி அங்கிருந்து அவரை அழைத்து சென்று வண்டியில் எற சொல்கிறார். பின்னால் வந்த சுந்தரம் என் மனைவி என பதட்டத்துடன் இருக்க, சரவணன் சிவகாமியை பைக்கில் கூட்டிக் கொண்டு செல்கிறார். சிவகாமி இதனை நாளாக நான் உன் அப்பா கூட பைக்கில் சென்றதில்லை அவரிடம் சைக்கிள் தான் இருந்தது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.