தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதன் முடிவில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. தற்போது அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வரவுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெளியான அறிவிப்பின் படி, அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வாரத்தில் அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கோவில்கள் திறப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் அந்நாட்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து விடக்கூடாது. ஆகையால் கட்டுப்பாடுகளை சற்று கடுமையாக்குவது குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.
நாட்டின் தலைநகருக்கு முழுமையான மின்சாரம் வழங்கல் – மத்திய அரசு உத்தரவு!
அதுமட்டுமின்றி நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் முதல்வர் கலந்து ஆலோசிக்க உள்ளார். இக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு தளர்வுகள் / கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.