தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்!

0
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்!

உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை வைரஸ் நோய்த் தொற்று பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை:

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்நோய் பாதிக்கபட்டால் 6 முதல் 13 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மேலும் பாதிப்பு தீவிரமடைந்தால் 5 முதல் 21 நாட்கள் வரை கூட தாக்கம் இருக்கும். காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, நிணநீர் முனைகளில் வீக்கம், குளிர்ச்சி மற்றும் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கி விட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது கேரளாவில் இரண்டு நபருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் – இன்று முதல் துவக்கம்

மேலும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதித்ததில் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!