தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் பதிவு:
இந்தியாவில் மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மருத்துவத் துறை என்பது மக்களை பொறுத்த வரை ஒரு புனிதமான தொழிலாக பார்க்கப்படுகிறது. மக்கள் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்க கூடியவர்கள் மருத்துவர்கள் தான் என்றால் மிகையாகாது. இதனால் தான் பலரும் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் படித்து வருகின்றனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருத்துவப் படிப்பு என்பது பலருக்கும் கனவாகவே போகும் நிலை அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு காரணம் மாணவர்களிடையே அதிகரிக்கும் போட்டிகள், குறைவான மருத்துவ இடங்கள், கல்வி கட்டணம் போன்றவைகள் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்பு தான் ஏழை மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களின் மருத்துவ கனவுகள் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் பல மாணவர்கள் ஏதாவது ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவ துறையில் மருத்துவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் அதிகம் உள்ளது.
மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 4 நாட்களுக்கு ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை
அந்த வகையில் தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் துணை மருத்துவ படிப்புகளான பி.பார்ம் ( லேட்டரல் என்ட்ரி ), போஸ்ட் பேசிக், பி.எஸ்.சி நர்சிங், போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான நர்சிங் பட்டய படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம், மற்றும் சான்றிதழ் பட்டடிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இதனை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 12 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.