தமிழகத்தில் 9ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் தற்போது முன்பனிக்காலம் துவங்கியுள்ளது. அதனால் நாளை முதல் 9ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக தென் மாவட்டங்களில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கேஷ்பேக் சலுகை – முக்கிய விவரங்கள் இதோ!!
மேலும் இன்று பிற்பகல் முதல் தமிழகத்தில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!!
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் நேற்று ஒடிஷாவின் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது முன்பனிக்காலம் தொடங்கியுள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை பனி மூட்டம் காணப்படுகிறது. அதனால் நாளை முதல் 9ம் தேதி வரை மட்டுமே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பின் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது