தடுப்பூசி செலுத்தினால் ‘ஆண்ட்ராய்டு போன்’ இலவசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தடுப்பூசி செலுத்தினால் 'ஆண்ட்ராய்டு போன்' இலவசம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்தினால் 'ஆண்ட்ராய்டு போன்' இலவசம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்தினால் ‘ஆண்ட்ராய்டு போன்’ இலவசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குலுக்கல் முறையில் ஆண்ட்ராய்டு போன் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் இலவசம் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசிகள் முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதன் விளைவாக தமிழகத்தில் நோய்த்தொற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றை முழுமையாக குறைக்கும் முயற்சியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது அரசு. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

#BreakingNews முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் – கட்சியினர் அதிர்ச்சி!

கடந்த வாரம் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் சென்னையில் 1,88,080 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதே போல இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செப்.27 முதல் தேர்வு ஆரம்பம்!

அம்மாவட்டத்தில் நாளை (19.09.2021) மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றுக்கும் ரூ.1,000 வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @TiruvallurCollr-ஐ டேக் செய்து செப்டம்பர் 25ம் தேதிக்குள் பதிவிட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!