#BreakingNews முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் – கட்சியினர் அதிர்ச்சி!
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளான அரசியல் மோதல்களுக்கு மத்தியில் சுமார் நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ராஜினாமா:
பஞ்சாப் சிஎம் கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் ஆளுநரை சந்தித்து அவர் மற்றும் அவரது அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் என்று அவரின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். முதல்வராக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அமரீந்தர் சிங். அதில், ‘இன்று காலை பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், எனது முடிவை பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெரிவித்தேன்’ என கூறியுள்ளார். அவரின் முடிவு ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செப்.27 முதல் தேர்வு ஆரம்பம்!
பஞ்சாப் மாநிலத்தில் புதிய மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. எனினும், இந்த மறுசீரமைப்பு மாநிலத்தில் உட்கட்சி மோதலை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் சமாதானம் செய்ய முடிவெடுத்த நிலையில் அடுத்ததடுத்த மோதல்கள் ஏற்பட்டது. சில எம்எல்ஏ.,க்கள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக திரும்பியது, முதல்வரை மாற்ற வேண்டும் என கோரியது உள்ளிட்டவை சலசலப்புகளை ஏற்படுத்தியது.
TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனது எதிர்கால திட்டம் பற்றி தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்து உள்ளார்.