சென்னை பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – செப்.27 முதல் தேர்வு ஆரம்பம்!
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பல்கலை தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த வரும் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. இதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது.
TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
செமஸ்டர் தேர்வுகள் நெருங்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மூடும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் அனைத்து தேர்வுகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. அதே போல தொலைதூர கல்வியின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தொலைதூர கல்வி திட்டத்தால் பணிக்கு செல்வோரும் பகுதி நேரம் கல்வி பயின்று வருகின்றனர். எல்லோர்க்கும் எப்போதும் கல்வி என்ற கொள்கையுடன் தொலைதூரக் கல்வி இயக்கம் கொண்டு வரப்பட்டது.
Ola Electric Scooter விற்பனை நவம்பர் 1 முதல் மீண்டும் துவக்கம் – ரூ.499 முன்பதிவு!
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை ideunom.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.