தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வருவதை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருமாத காலம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – கனமழை எதிரொலி!
அதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறை சுவர்கள் சேதமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதனால் அவ்வாறு சேதமடைந்துள்ள பள்ளி வளாகத்தின் சுவர்களை முதலமைச்சரின் ஆலோசனைப்படி உடனே இடித்து சரிசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 1 நாள் தான் இருக்கு!
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு ரத்து செய்யவோ, பாடத்திட்டங்கள் இன்னும் குறைக்கவோ முடியாது. ஆனால் தற்போது CBSE பள்ளிகளில் மட்டுமே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. நம்மை பொறுத்தவரை இதுபோன்ற தேர்வுகள் ஏதும் இப்போது நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.