தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 1 நாள் தான் இருக்கு!

0
தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு - இன்னும் 1 நாள் தான் இருக்கு!
தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு - இன்னும் 1 நாள் தான் இருக்கு!
தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 1 நாள் தான் இருக்கு!

தமிழகத்தில் பென்சன் வாங்குபவர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களின் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. அதற்கான கடைசி நாள் நாளை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாழ்வு சான்றிதழ் அவசியம்

தமிழகத்தில் முதியோர், பணி ஓய்வு பெற்றவர்கள், ஆதரவற்ற கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன் பெறுகின்றனர். தற்போது இந்த திட்டங்களை பெறுபவர்கள் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தமிழகத்தில் மொத்தம் 8 பென்சன் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பென்சன் தொகையாக வழங்கப்படுகிறது.

தமிழக அரசுத் துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப வலியுறுத்தல்!

தற்போது இத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆதார் கார்டு பெறும் வரை பென்சன் தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு விண்ணப்பித்ததற்கான கோரிக்கை ஆவணம் காட்ட வேண்டும். அத்துடன் இதோடு வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டும். மேலும் இதோடு வாழ்வு சான்றிதழ் மற்றும் ஜீவன் பிரமாணப் பத்திரம் ஆகியவற்றையும் தற்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல், 50% மட்டுமே அனுமதி – கொரோனா பரவல் எதிரொலி!

இதனை சமர்ப்பிப்பதற்கு (நவ.30) நாளை கடைசி நாளாக அறிவித்துள்ளது. மேலும் பணி ஓய்வு பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு சமர்ப்பித்தால் தான் ஒரு ஓய்வூதியதாரர் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அறிவித்துள்ளது. இதனை வங்கிகளில் நேரில் சென்று அல்லது தபால்காரர் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். அத்துடன் பல்வேறு வங்கிகள் வீட்டுக்கே வந்து வாழ்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் சேவைகளையும் வழங்குகின்றன. மேலும் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!