பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் திடீர் அறிவிப்பு! ஊரடங்கு எதிரொலி!
கொரோனா தொற்று தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் புனேயில் துணை முதல் மந்திரியுமான அஜித்பவார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சர் திடீர் அறிவிப்பு:
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் பொதுமக்கள் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
தனியார் வங்கி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022
இந்த வகையில் புனேயில் கொரோனா பாதிப்பு பற்றிய நிலவரம் குறித்து நேற்று அதிகாரிகளுடன் மாவட்ட பொறுப்பு மந்திரியும், துணை முதல் மந்திரியுமான அஜித் பவார் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புனே மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு எடுக்கப்படவில்லை, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள்!
இந்த வகையில் புனே மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு நீச்சல் குளம் , மைதானங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் மற்றும் லோனவாலா, சின்காகாத் போன்ற சுற்றுலா தலங்களில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து சனி, ஞாயிறு கிழமைகளில் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் மற்றும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் 51% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளதாகவும், ஊரகப்பகுதிகளில் 75 % சிறுவர்கள் முதல் டோஸ் போட்டு உள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.