தமிழக மக்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை பதிவு – வெளியான தகவல்!
தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா வைரசால், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசு சொல்வதை கேட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், மாஸ்க், சமூக இடைவெளி, கைகளைக் கழுவிக் கொள்வது போன்ற விதிகளை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2000 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மருத்துவத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி – பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வந்தாலும், வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது, இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.