தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி – பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி - பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி - பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் போட்டி – பரிசு தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம்!

தமிழகத்தில் வருகிற ஜூலை 18ம் தேதி அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்த தினவிழாவை முன்னிட்டு பல்வேறு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நாள்:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான, பேரறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி கடந்த 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். இதற்காக ஜூலை 18ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஜூலை 18ம் தேதி அன்று “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 18ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – இந்த நிலை எப்போது மாறும்?

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 18ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 6ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வரவேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் இப்போட்டிக்கு ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு, பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போர் தியாகிகள் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 2ம் பரிசாக 7 ஆயிரம் ரூபாய் மற்றும் 3ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!