பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடைகால விடுமுறை அறிவிப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் முன்கூட்டியே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா காலகட்டத்தில் பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இதன் பின்பு தமிழகத்தில் கொரோனா குறைந்த காரணத்தால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் மாணவர்களிடையே ,பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற அச்சம் நிலவி வருகிறது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் வழக்கத்தைவிட வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வைக்கப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.