தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த சூழலில் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மார்ச் 17ம் தேதி முதல் தலைநகரில் முழு ஊரடங்கு அமல் – அரசு புதிய நடவடிக்கை!
தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் சூழல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. அத்துடன் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கற்றுக்கொண்ட பாடம் இது தான்? வித்யூலேகா விளக்கம்!
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் கூறியதாவது, தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களால் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் உள்ளனர். அந்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்க கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.