மார்ச் 17ம் தேதி முதல் தலைநகரில் முழு ஊரடங்கு அமல் – அரசு புதிய நடவடிக்கை!
நோட்டா அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சித்ததால் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தங்களது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் மக்களை பாதுகாக்க உக்ரைன் நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
நோட்டா அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சித்து தான் இந்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் விவகாரத்துக்கு காரணமாக அமைந்தது. இதனால் நோட்டா கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். இதனையும் மீறி நோட்டா கூட்டமைப்பில் நுழைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் மேற்கொண்டு வந்தது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை மீறி நோட்டா அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சிப்பதால் ரஷ்யாவின் முப்படைகளும் கடந்த 20 நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கற்றுக்கொண்ட பாடம் இது தான்? வித்யூலேகா விளக்கம்!
இந்நிலையில் ரஷ்யா, கார்கிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப்பெரிய அணுமின் நிலையங்களையும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரான கிவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றனர். ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது அப்போது பள்ளிக்கூடம் ஒன்று அந்த தாக்குதலில் சிக்கி தரைமட்டமானது. மேலும் ரஷ்யா உக்ரைனில் உள்ள குடியிருப்புகள் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ரஷ்ய தாக்குதலிலிருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாக்க உக்ரைன் தலைநகர் கீவ்வில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முகாம்களிலிருந்து மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உக்ரைன் நாட்டின் நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் வருகிற 17-ஆம் தேதி காலை 7 மணி வரை கிட்டத்தட்ட முப்பத்தி ஆறு மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் என கிவ் நகர மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டுமே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது