அரசு பணிகளை இந்தியில் மேற்கொள்ள வேண்டும் – மத்திய உள்துறை இணை அமைச்சர்!
இந்தியாவில் இன்று அனைத்திந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. அதில் அரசு பணிகள் இந்தி மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தி:
இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள், உடைகள் போன்றவற்றை பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். இந்தியா பலதரபட்ட மக்கள் வாழும் ஒரு நாடாக உள்ளது. பல மொழிகள் பேசும் மக்கள் இந்தியாவில் இருப்பதால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்பது இல்லை. ஆனால் அதிக மக்களால் பேசக்கூடிய மொழியாக இந்தி உள்ளது. அதனால் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
ரூ.11,000 ஊதியத்தில் மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சமீபத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு அனைத்து மாநிலங்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அரசு பணிகள் இந்தி மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு – அரசாங்கம் உத்தரவு!
செய்தியாளர்களை சந்தித்த அஜய் மிஸ்ரா நாடு சுதந்திரம் அடைந்தபின் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அரசியலமைப்பு நிர்ணய சபையில் இந்தி அலுவல் மொழியாக ஒருமனதாக அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் கடமையை நினைவில் கொண்டு அரசு பணிகளை இந்தியில் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தொடர்பாக ஒரு வழக்கில் இவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.