அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு – அரசாங்கம் உத்தரவு!

0
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு - அரசாங்கம் உத்தரவு!
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு - அரசாங்கம் உத்தரவு!
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு – அரசாங்கம் உத்தரவு!

இலங்கையில் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2022ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்ததோடு அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வு வயது அதிகரிப்பு

தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் கொரோனா 3ம் அலை தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. உலக வரைபடத்தில் மிகவும் சிறிய நாடக கருதப்படும் இலங்கையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் ஒரு நாளில் 10 ஆயிரம் பேர் வரை புதிதாக பாதிக்கப்பட்டு வந்தனர். அதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்பாக இந்த பாதிப்பு 800க்கும் குறைவாக தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் தற்சமயம் இலங்கையில் நடைபெற்றுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே 2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை குறித்து அவர் பேசுகையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொது மக்கள் மீது அந்த சுமையை ஏற்றாமல், உற்பத்தி துறைக்கும் தடை இல்லாமல் வருவாய் ஈட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பட்ஜெட் அறிக்கையின் போது, பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சுமார் 30 ஆயிரம் மில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கட்டமைப்பு விரிவாக்கம், பள்ளிகள் இண்டர்நெட் வசதி, அரசு சேவைகள் கணினி மயமாக்கல், சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம், விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவும் புதிய வகை நோரோ வைரஸ் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இது தவிர இலங்கையின் அரசுத் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் இதற்காக 500 மில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் MPக்களின் ஓய்வூதிய காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!