ரூ.11,000 ஊதியத்தில் மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.11,000 ஊதியத்தில் மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.11,000 ஊதியத்தில் மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.11,000 ஊதியத்தில் மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மதுரை மாநகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தற்காலிக செவிலியர்கள்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி, ஏப்ரல் இறுதியில் மற்றும் மே மாத ஆரம்பத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும் அரசு, மருத்துவ பணியாளர்களை அதிக அளவில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தொடங்கியது. அதிக அளவில் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்த பின்னர் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு – அரசாங்கம் உத்தரவு!

இந்த ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் பணி நிரந்தரம், ஊக்கத்தொகை போன்ற கோரிக்கைகளை அரசுக்கு வைத்து அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசு இந்த கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் வழங்க நியமிக்க உள்ள செவிலியர்கள் நியமனத்தின் போது ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது மதுரை மாநகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் உள்ளது.

மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பில் மொத்தம் 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் அறிஞர் அண்ணா மாளிகை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் பணிக்கு மாதம் ரூ.11,000 ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!