தமிழகத்தில் தொடரும் மின்தட்டுப்பாடு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

0
தமிழகத்தில் தொடரும் மின்தட்டுப்பாடு - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் தொடரும் மின்தட்டுப்பாடு - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் தொடரும் மின்தட்டுப்பாடு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழகம் முழுவதும் சில மாதங்களாகவே கிராமப்புறங்களிலும் , நகர்ப்புறங்களிலும் மின்சாரம் வருவதும் போவதுமாக இருப்பதாக பல தரப்பில் இருந்து புகார் வந்தது. இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஆலோசனை:

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் பகல் நேரங்களில் அக்னி வெயில் போல அனலடிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின்வெட்டு கடும் சிரமத்தை தருகிறது. அதே போல மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினையால் வயதானவர்களும் குழந்தைகளும் புழுக்கத்தில் சிக்கி தவிப்பதோடு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த குற்றசாட்டை கருத்தில் கொண்டு, புதிய திட்டங்கள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைப்பதால் மின் தட்டுப்பாடு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் தேவையை சமாளிக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் எதிர்கால தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மின்சாரத் துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் 3 நாட்கள் வங்கி சேவைகள் நிறுத்தம் – ஜூன் 27ல் வேலை நிறுத்தப் போராட்டம் !

இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோடை காலத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மின்மோட்டார்கள் பொருத்தும் பணி, மின்சார வாரியங்களில் ஏற்படும் விபத்துக்கள் , அடிக்கடி ஏற்படும் மின்தடை ஆகியவற்றை சரி செய்வது குறித்தும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!