இந்தியாவில் 3 நாட்கள் வங்கி சேவைகள் நிறுத்தம் – ஜூன் 27ல் வேலை நிறுத்தப் போராட்டம் !
தமிழகத்தில் அனைத்து வங்கி ஊழியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வருகிற ஜூன் 27ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர்.
வேலை நிறுத்தப்போராட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2004ம் ஆண்டு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பணிக்கொடை, கடன் பெறுவது உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதில்லை என்று ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதன் தொடர்ச்சியாக தற்போது வங்கி ஊழியர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியிருப்பதாவது, கடந்த 2015ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாததால் வருகிற ஜூன் 27ம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்? கல்வித்துறையின் முடிவு!
மேலும் இந்த போராட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் கத்தோலிக்க சிரியன் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வருகிற ஜூன் 25ம் தேதி 2வது சனிக்கிழமை மற்றும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேலும் மறுநாள் திங்கட்கிழமை ஜூன் 27ல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கி சேவை செயல்படாது என்றும் தெரிவித்துள்ளார்.