தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர் உரை!
தமிழகத்தில் தற்போது 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கடைகள்:
தமிழ்நாடு அரசின் ஒரு சிறப்பான திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் ஏழை எளிய சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை மையமாக வைத்து தமிழக அரசு நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. மேலும் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஒரு சாதனையை படைத்து உள்ளது திமுக. இதனால் திமுக தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வெற்றியை சிறப்பிக்கும் வண்ணம் முதல்வர் முன்னரே அறிவித்த படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வெகு விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை – ஜாக்பாட் உத்தரவு!
அதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் 2022-23 ஆண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். மேலும் பட்ஜெட் பல நன்மைகளை கொண்டுள்ளது. இது தவிர பட்ஜெட் அறிவித்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் தமிழக சட்டசபையில் தொடர்ந்து இது குறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகள் தொடர்பான சில விவாதங்களும் நடைபெற்றது. அதற்கும் அமைச்சர் பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் குறித்த ஒரு முக்கிய தகவலை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று கூறி இருந்தனர். மேலும் இது குறித்து திருக்கட்டுப்பள்ளி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.