பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை – ஜாக்பாட் உத்தரவு!

0
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை - ஜாக்பாட் உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை - ஜாக்பாட் உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் 40 நாட்கள் கோடை விடுமுறை – ஜாக்பாட் உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

கோடை விடுமுறை

இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவத் தொடங்கியது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS புதிய வழிகாட்டுதல்கள்!

இதனை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதே போல மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இப்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், கொரோனா காரணமாக குறைவான அளவு மட்டுமே இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று உள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்த பின்பு மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதர்பா பகுதிகளில் கடும் வெயில் நிலவுவதால் இப்பகுதியில் மட்டும் ஜூன் 27ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி அன்று வெளியாகும் என்றும் மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!