தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட போவதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர், பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கட்டண உயர்வு:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அரசு மற்றும் தனியார் துறைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் வரிவசூல் பாதிக்கப்பட்டு அரசின் வருவாய் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் அரசு மிகுந்த கடன் நெருக்கடியில் சிக்கி கொண்டது. இதற்கு மத்தியில் பதவி ஏற்று கொண்ட திமுக தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றும் பொருட்டு திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தது. ஏற்கனவே அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இலவச திட்டங்களை செயல்படுத்துவது எவ்வாறு சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு முதுகலை ஆசிரியர்களுக்கு 2 மாத தொகுப்பூதியம் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!
இதற்கிடையில் வாக்குறுதி அளித்தபடி பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி திட்டமாகவும் இது இருந்து வருகிறது. இந்த இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து துறை நஷ்டத்தையும் சந்தித்தது. தற்போது அரசுக்கு அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் பண வீக்கம் காரணமாக பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடன் சுமையை ஈடுகட்டும் வகையில் மற்றவைகளை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், கட்டணம் தொடர்பான பட்டியல் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை, கட்டண உயர்வுக்கான அட்டவணை என்பதெல்லாம் உண்மை இல்லை, இது தவறான தகவல் என்று கூறியுள்ளார்.