தமிழக அரசு முதுகலை ஆசிரியர்களுக்கு 2 மாத தொகுப்பூதியம் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கான விவரங்களை சேகரிக்க கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதுகலை ஆசிரியர்கள்:
2021- 2022ம் கல்வி ஆண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 2774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5 மாத காலங்களுக்கு பெற்றோர் கழகம் மூலம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட்டு பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022ம் மாதங்களுக்கான நிலுவை தொகை வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலி மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வெகுமதி – மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!
அரசின் ஆணையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 2021-2022 கல்வியாண்டில் இருந்த 2774 முதுகலை ஆசிரியர் காலியிடங்கள் மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பூதியத்திற்க்கு நிரப்பப்பட்டது. இவர்களுக்கான 5 மாதத்திற்கான தொகுப்பூதியமானது அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021- 2022 நிதியாண்டு 31.3.2022 உடன் நிறைவுற்றதால் டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை மட்டுமே முதுகலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு பெறப்பட வேண்டிய நிலுவை ஊதிய விவரம் மற்றும் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அரசின் ஆணையில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மே 16ம் தேதி மாலை 4 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.