தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுப்பது பற்றி தமிழக அரசு தற்போது திட்டமிட்டு கொண்டிருக்கிறது. காலை சிற்றுண்டிக்காக பள்ளி மாணவர்களின் பள்ளி நேரம் மாற்றப்படுமா என்பது குறித்தான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளி நேரம் மாற்றம்:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்ட நிலையிலேயே தான் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், மாணவர்களின் நலன் கருதி 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மீதமுள்ள 65 சதவீத பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் தேர்வு எழுதுவதால் தேர்வு வினாத்தாளும் எளிமையாகத்தான் கேட்கப்பட்டு வருகிறது.
சென்னை: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,680க்கு விற்பனை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றனர். பள்ளியின் பொருட்களை சேதப்படுத்துவது, ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத் தேர்வு முடிந்ததும் பள்ளியை விட்டுச் செல்ல தான் போகிறோம் என்கிற தைரியத்தில் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பள்ளியின் பொருட்களையும் மிகவும் சேதப்படுத்துகின்றனர் மற்றும் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்து அத்துமீறல்களில் மாணவர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அவ்வப்போது பள்ளியில் மாணவர்கள் செய்யும் அட்டகாசம் சமூக வலைதளங்களில் அதிகமாக காணமுடிகிறது. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும், எதற்காக அந்த மாணவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற காரணமும் TC ல் குறிப்பிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தகர்ப்பதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டிக்காக பள்ளி நேரம் மாற்றப்படுமா என்பது குறித்தும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.