சென்னை: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,680க்கு விற்பனை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கத்தின் விலை பணவீக்கம், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,440க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பாகவும் வருமானம் தரும் வகையிலும் பொதுமக்கள் சேமிக்க முற்பட்டனர். அதன்படி தங்களின் சேமிப்பு பணத்தை சிறந்த வருமானம் வரும் வகையில் வங்கி, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தங்கத்தின் மீதும் பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர். ஏனெனில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை சேமிப்பதன் மூலமாக அதிக லாபத்தை பெற முடியும்.
புதிய ஆதார் அட்டை, திருத்தம் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – சிறப்பு முகாம் ஏற்பாடு!
அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வு சாதாரண மக்களிடையே பேரிடியாக விழுந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் நேற்று நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,440க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,680க்கு விற்பனையாகிறது. இதையடுத்து வெள்ளியின் விலை ஒரு கிராமும் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,000க்கு விற்பனையாகிறது. மேலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றத்தோடு காணப்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.