கொரோனா மஞ்சள் அலெர்ட் – மினி ஊரடங்கு அமல்! ஒமைக்ரான் எதிரொலி!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அப்பகுதிக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மினி ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மற்றுமொரு உருமாறிய கொரோனா வகையாக ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20 நிறுவனங்கள் பங்கேற்பு!
அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தொற்று பாதிப்புகள் வரிசையில் முதலிடம் வகித்து வருகின்றன. அவ்வாறு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று இரவு மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!
அதனை தொடர்ந்து உணவு விடுதிகள் 50% இருக்கைகளுடனும், பொதுப்போக்குவரத்து 50% பயணிகளுடனும், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தினசரி பாதிப்பு 0.5% என உள்ளதால் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.