தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20 நிறுவனங்கள் பங்கேற்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 20 நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 20 நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20 நிறுவனங்கள் பங்கேற்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (29.12.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது முதல் வேலையிழந்த மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் அனைத்து வட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பல உள்ளூர் மற்றும் வெளியூர்களில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!

மதுரை, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 30ம் தேதி அன்று தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் குறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு வேலை அளிக்கவுள்ளனர். 8ம் வகுப்பு, 10, 12ம் வகுப்பு மட்டும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ போன்ற கல்வித்தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

தமிழக மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனங்கள் பெறுவோரின் அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஏராளமானோர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இதனால் தொடர்ந்து அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!