மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!

0
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை? அமைச்சரவை கவுன்சில் திட்டம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி உள்ள நிலையில், கடந்த 18 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியானது ஒரே முறையில் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

DA நிலுவைத்தொகை:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி முதல் ஜூலை வரை ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DA வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இந்த அகவிலைப்படியானது கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30 வரை நிலுவையில் வைக்கப்பட்டது.

தமிழக மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

இந்த காலத்தில் இறுதியாக 17% ஆக இருந்த அகவிலைப்படி மொத்தம் 11% அதிகரிக்கப்பட்டு 28 % ஆக நியமிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படியை (DA) 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 18 மாத கால நிலுவை தொகை வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பல மாதங்களாக நிலுவையில் உள்ள DA நிலுவைத் தொகையை வழங்குவதற்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள DA நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்குவதற்கு அமைச்சரவை கவுன்சில் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் (JCM) கூட்டம் விரைவில் நடைபெறும். இதில், டிஏ நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சேலை – ஏற்பாடுகள் தீவிரம்!

அதன்படி, முதல் நிலை ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரை இருக்கும். அதே நேரத்தில், லெவல்-13 ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அகவிலைப்படி நிச்சயம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!