தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சேலை – ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேஷ்டி, சேலை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வேஷ்டி மற்றும் சேலை:
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு மக்கள் அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் டிச.31ம் தேதி இரவு வரை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை – டிஜிபி உத்தரவு!
அந்த வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விரைவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேஷ்டி மற்றும் சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேஷ்டி, சேலை பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? அமைச்சர் திடீர் விளக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி!
அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உள்ள 1,035 ரேஷன் கடைகள் மூலம் 6.64 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் தாலுகா வாரியாக மொத்தம் 5 லட்சத்து 2 ஆயிரத்து 353 சேலைகளும், 5 லட்சத்து 2 ஆயிரத்து 817 வேஷ்டிகளும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இவை அனைத்தையும் தாலுகா அலுவலகங்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.