தமிழக மீன்வளத் துறையில் 600 காலிப்பணியிடங்கள் – ஜன.12ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் மீன்வளத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
600 காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காலிப்பணியிட அறிவிப்பு குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 600
கல்வித்தகுதி: இளங்கலை மீன்வள அறிவியல்/ கடல் உயிரியல்/ விலங்கியல்/ தகவல் தொழிநுட்பம்.
வயது வரம்பு: 01.07.2021 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.10,000 + 5,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிற்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2021
இந்த பணி குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.