தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு – ஆவின் நிறுவனத்திற்கு நெருக்கடி!
தமிழகத்தில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வு அறிவித்த நிலையில் அதனால் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால் பவுடர், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம்:
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது . மேலும் ஜி.எஸ்.டி., வரி உயர்வை காரணம் காட்டி, தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12 சதவீதம் என உயர்த்தியது. அதன் பின் சில தனியார் நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன.
ஆவின் வாடிக்கையாளர்களுக்கு இனி பாட்டிலில் பால்? முக்கிய தகவல் வெளியீடு!
அதனால் பொதுமக்கள் பலர் ஆவின் நிறுவனத்தை தேடி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். ஆனால் ஆவின் நிறுவனத்தில் அதிகமாக கொள்முதல் செய்ய கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் தனியாரிடம் பாலை, விவசாயிகள் விற்று வருகின்றனர். அதன் காரணமாக இனி வரும் காலங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி பால் பவுடர், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பால் கொள்முதல் குறைந்த மாவட்டங்களில் அதை அதிகரிக்க பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு பால் வளத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
fastag