அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய நபர்களின் பெயரை இணைப்பது எப்படி?
ரேஷன் கார்டில் அவ்வப்போது அனைத்து விவரங்களையும் அப்டேட் செய்தபடி இருக்க வேண்டும். அதாவது புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக கேட்கப்படுவதால் ரேஷன் கார்டில் உள்ள தகவலை பிழையில்லாமல் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!
அதாவது ரேஷன் கார்டில் உள்ள யாராவது இறந்துவிட்டால் அவரின் பெயரை உடனடியாக ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். மேலும், புதிதாக குடும்பத்தில் உறுப்பினராக சேர்ந்திருந்தால் அவரின் பெயரையும் ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும். அதே போல குழந்தைகளின் விவரங்களையும் அவ்வப்போது அப்டேட் செய்தபடியே இருக்க வேண்டும். புதிதாக திருமணமானவர்கள் பெயரை புதிய ரேஷன் கார்டில் இணைக்கும்போது ஏற்கனவே பெற்றோரின் ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும்.
தற்போது புதிதாக திருமணமானவர்களின் பெயரை எப்படி ரேஷன் கார்டில் இணைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். முதலில் தமிழக உணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpds.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளையும் செய்துகொள்ளலாம். மேலும், இது குறித்தான விவரங்கள் ஏதும் அறிய விரும்பினால் 1967 அல்லது 1800-425-5901 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.