தமிழக பள்ளிகளில் மார்ச் 16, 17ம் தேதிகளில் ஆய்வு செய்ய குழு அமைப்பு – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இது போன்ற ஆய்வுகள் முன்னரே 3 மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்காவது கட்டமாக நடைபெற உள்ளது.
பள்ளிகளில் ஆய்வுகள்:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விரைவில் வழங்கல்!
நடப்பு ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் வெளியிட்டு விட்டது பள்ளிக்கல்வித்துறை. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
இந்த உயர் அதிகாரிகள் சார்பில் முன்னரே 3 மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்காவது கட்டமாக மார்ச் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இந்தக் குழு ஆய்வு செய்து 17ஆம் தேதி மதியம் நடக்க உள்ள ஆய்வு கூட்டத்தில் தங்களது பள்ளிகளின் ஆய்வுக் கருத்துக்களை கூற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.