TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது TCS தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு MBA பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சமீப காலமாக மிகப்பெரிய அளவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏனென்றால் கொரோனா பரவல் காலத்தில் முடக்கப்பட்ட தொழில்நுட்ப சேவைகளை பூர்த்தி செய்வதற்காக IT நிறுவனங்கள் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்காக TCS நிறுவனம் ஆஃப்-கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல் 2022, ஸ்மார்ட் பணியமர்த்தல் 2022, எம்பிஏ பணியமர்த்தல் 2022 போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
தமிழக பள்ளிகளில் மார்ச் 16, 17ம் தேதிகளில் ஆய்வு செய்ய குழு அமைப்பு – கல்வித்துறை உத்தரவு!
அந்த வகையில் தற்போது TCS நிறுவனத்தில் காலியாக இருக்கும் சில பதவிகளுக்கு MBA பணியமர்த்தல் 2022 மூலம் இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியடப்பட்டுள்ளது. இதன் மூலம் MBA பட்டம் பெற்ற புதிய மாணவர்கள் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இப்பணிக்கான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை விரிவாக காணலாம்.
தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் 2022, 2021ல் MBA தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் 2022 ஆண்டில் MBA தேர்ச்சி பெற்றவர்கள் அதாவது இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். - தவிர மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஜெனரல் மேனேஜ்மென்ட், பிசினஸ் அனலிட்டிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் MBA பட்டப்படிப்பு அவசியம்.
- விண்ணப்பதாரர்கள் MBA அல்லது பிசினஸ் அனலிட்டிக்ஸ் பிரிவில் முதுகலை டிப்ளமோ, மேனேஜ்மென்ட்டில் முதுகலை டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுத் தேதி:
- TCS இந்த தேர்வை தொகுப்பாக நடத்துகிறது.
- அந்த வகையில் விண்ணப்ப பதிவு செய்து முடித்தவர்களுக்கு சோதனைத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.