மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு வெளியீடு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு வெளியீடு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!

கொரோனா தொற்றின் பரவலால் நாடு முழுவதும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவ பணியை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ பொருட்களும் கையிருப்பு இல்லாமல் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

நாடு முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு – தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்!!

இதனால் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவிலான கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டி இருப்பதால், எந்த வகையிலான மருத்துவ தகுதியும் கொண்ட மத்திய அரசு ஊழியர்களும் மருத்துவ பணி செய்யவோ அல்லது ஆன்லைன் வழி ஆலோசனைகளை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக தங்கள் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இந்த மருத்துவ பணி அல்லது ஆலோசனை பணிகளை தங்கள் அலுவலக பணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், தொண்டு அடிப்படியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று பணியாளர் நலத்துறை அமைச்சகம் மத்திய அரசின் அனைத்து துறை பணியாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!