மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் – ஆட்சியர் அறிவிப்பு!!
தென்காசி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றால் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதி இல்லை. அத்தியாவசிய தேவையின்றி மளிகை, காய்கறி, தேநீா் மற்றும் உணவகங்களில் கூடி அமா்ந்து பேசுவதை தவிா்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேநீர் கடைகள், உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட வேண்டும். தேவையின்றி தேநீர் கடைகளில் அல்லது உணவகங்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.