நாடு முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு – தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு இணங்க மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த 6 மாதம் கால அவகாசம் – முதல்வர் கடிதம்!!
கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள மார்க்கெட்டில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமுடக்கத்தை மீறி நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் உள்ளதால் போலீசார் திணறி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அத்தியாவசிய தேவை பொருள்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகை காரணமாக மக்கள் பொருள்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை காரணமாக மாநிலம் முழுவதும் வரும் வியாழன் கிழமையே கட்டுப்பாடுகளை கடுமையாக்க அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். தினமும் மளிகை, காய்கறி கடைகள், உணவகங்கள் பிற்பகல் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 29 ஆம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருகின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் உட்பட 8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ஆலோசனை மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தடுப்பூசி நிறுவனமான பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே போல மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி மே-ஜூன் மாதத்தில் இரண்டு மடங்காக உயரும் என்றும் செப்டம்பர் மாதத்தில் 10 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.