வங்கி கடன் தவணை (EMI) செலுத்த 6 மாதம் கால அவகாசம் – முதல்வர் கடிதம்!!
வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முக ஸ்டாலின் கடிதம்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த வருட பாதிப்பை விட தற்போதய இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். நம் நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருட இழப்புகளை ஈடு செய்வதற்குள் அடுத்த இழப்புகள் உருவாகி விட்டது. மக்களுக்கு வருமானம் இல்ல்லாததால் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் திருநாள் – தலைமை காஜி அறிவிப்பு!!
இதை கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து வணிக அமைப்புகளுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் . அக்கூட்டத்தில் முக ஸ்டாலின் வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதப்படும் என தெரிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறு, குறு வணிக நிறுவனங்கள் வாங்கிய கடன் தவணையை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆட்டோ, கால் டாக்சி வைத்திருப்பவர்கள் தங்கள் கடன் தவணையை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் 6 மாத காலத்திற்கு இஎம்ஐ, வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.