மாநிலத்தில் இந்த இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – அதிகரிக்கும் கொரோனா பரவல்!
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் தொற்று அதிகம் பரவிய மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.
HDFC வங்கியில் 21,486 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் பணியமர்த்தி சாதனை!
அதனால் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அத்துடன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது ஓமைக்ரானின் புதிய உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய அரசில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 79 காலிப்பணியிடங்கள்..!
அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது, உத்தரபிரதேசத்தில் கௌதம் புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோ உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.